நாகர்கோவில்: பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை செப்டம்பர் 7ந்தேதி அன்று மாலை கன்னியாகுமரி காந்தி மண்டத்தில் இருந்து தொடங்கிய நிலையில், இன்று ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் இடங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறார். அதன்படி குமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் 12 மாநிலங்கள் வழியாக  3570 கி.மீ.  நடைபயணம் மேற்காள்கிறார். இந்த நடைபயணம், தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாகக் காஷ்மீரைச் சென்றடைகிறது.

இந்த பாரத்ஜோடோ யாத்திரை நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, அகஸ்தீஸ்வரத்தில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, இன்று காலை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் நடைபயணத்தை தொடங்கி உள்ளார். அவரது இன்றைய நடைபயணம் குறித்த தகவல் வெளியிடப்பட்டஉள்ளது. ராகுலுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.

காலை 7மணி: அகஸ்தீஸ்வரத்தில் இருந்து 2வது நாள்  பாதயாத்திரை தொடக்கம்

மதியம் 2மணி: பெண்களுடன் , பெண் சமூக ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்

மதியம் 2.30 மணி: ஜவஹர் பால் மஞ்ச் ஓவியப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தல்

மதியம் 2.40 மணி: தலித்தலைவர்கள், சமூக ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்

மாலை 4.00 மணி: மீண்டும் பாதயாத்திரை தொடக்கம்

இரவு 7.00 மணி: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் பொதுக்கூட்டம்

2-வது நாளான இன்று ( 8-ந்தேதி) காலையில் 12 கிலோமீட்டர் தூரமும், மதியம் 6 கிலோமீட்டர் தூரம் என 18 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை செய்கிறார்.

நாளை 9-ந்தேதி காலையில் 9 கிலோமீட்டர் தூரமும், மதியம் 7 கிலோமீட்டர் என மொத்தம் 16 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 10-ந்தேதி காலையில் 9.5 கிலோமீட்டரும், மாலையில் 9 கிலோமீட்டர் என 18.5 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை: தமிழகத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தியின் பயணத்திட்டம்.. முழு விவரம்….