சென்னை: மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ஆகஸ்டு மாதம் 86 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 85.89 லட்சம் (ஏறக்குறைய 86லட்சம்)  பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அதன் இரண்டாம் கட்டம் மற்றும் 3ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) மட்டும்  85,89,977 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயிலின் பங்கு மகத்தானது. இதனால், சென்னையில்  வசிக்கும் மக்களிடையே, மெட்ரோ ரெயில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும்,  பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதி கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறத.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆகஸ்ட் மாதம் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், அதிகபட்சமாக 11.08.2023 அன்று 3,29,920 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும் இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும்  தெரிவித்துள்ளது.

2023  ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மே மாதத்தில் 72,68,007 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஆகஸ்டு மாதத்தில் 85,89,977 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 11.08.2023 அன்று 3,29,920 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.