சென்னை:

ருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில்,  மருத்துவ படிப்பில் 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.  அந்த அரசாணையை  சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது,  மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அனைத்து மனுக்கள் மீதும் நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை  (National Eligibility and Entrance Test – NEET)  மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தியது.

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தின்படி கற்பிக்கப்படுவதால், சிபஎஸ்இ நடத்தும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை ரத்து செய்தும், புதிய தரவரிசைப் பட்டியலைத் தயார் செய்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனி நீதிபதி வழங்கிய இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.