800 படத்தில் இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழினத் துரோகியான முத்தையா முரளிதரனாக தமிழர்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி நடிக்கவே கூடாது என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ராதிகா சரத்குமார் ட்விட்டரில் :-


முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்பவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?? அரசியல் பின்னணி கொண்ட தமிழருக்கு சொந்தமான சன் ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் ஏன் இருக்கிறார் என்று கேட்க வேண்டியது தானே?. விஜய் சேதுபதி ஒரு நடிகர். ஒரு நடிகரை கட்டுப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.