செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மொத்தம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக இங்கு கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 32, செங்கல்பட்டில் 30 மற்றும் திருவள்ளூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 3 பேருக்கும் அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேருக்கும் அமெரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 14,407 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 36 ஆண்கள் 41 பெண்கள் என மொத்தம் 56 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

41 பேர் இன்று குணமடைந்த நிலையில் 448 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.