தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 33 மற்றும் செங்கல்பட்டில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும் டெல்லியில் இருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 13,241 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 30 ஆண்கள் 26 பெண்கள் என மொத்தம் 56 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

45 பேர் இன்று குணமடைந்த நிலையில் 412 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.