ராமநாதபுரம்: இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் இருந்து இன்று அதிகாலை மேலும் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அல்லல்பட்டு வருகின்றனர். இதனால், அங்கு வசித்து வரும் இலங்கை தமிழர்கள் பலர் அண்டை நாடுகளில் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்று அதிகாலை இலங்கை வவுனியா பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அரிச்சல்முனை கடல் பகுதிக்கு பைபர் படகு மூலம் வந்திறங்கிய அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே இலங்கையில் இருந்து 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.