புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி உலகில் முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகமாகிறது.

Tecentriq என்ற மருந்து இதுவரை ஐ.வி. மூலம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் இனி அதனை ஊசி மூலம் செலுத்தப்பட உள்ளது.

இ்கிலாந்து சுகாதார அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளதை அடுத்து இனி ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கண்கான புற்றுநோயாளிகளுக்கு இந்த ஊசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது Tecentriq மருந்து ஐ.வி. மூலம் ஆண்டுக்கு 3600 பேருக்கு செலுத்தப்படுவதாகவும் இதற்கு 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும் என்றும் ஊசி மூலம் செலுத்த 7 நிமிடம் மட்டுமே தேவை என்றும் கூறப்படுகிறது.

நரம்புகள் வழியாக செலுத்தப்படுவதால் அதிக வலியும் வேதனையும் அடையும் நோயாளிகள் இதனால் அந்தளவிற்கு வலியை அனுபவிக்கவேண்டி இருக்காது என்று கூறப்படுகிறது.