ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ளது டிரகாட் பகுதி. இங்கு பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து இன்று காலை அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஏற்கனவே, இன்று அதிகாலை அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.