சென்னை: தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை அமலாக்க பிரிவின் மண்டல காவல்துறை தலைவராக செந்தாமரை கண்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக பிராஜ் கிஷோர் ரவி, சென்னை சைபர் கிரைம் பிரிவு 1ன் காவல் கண்காணிப்பாளராக சுதாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக காவல் தலைமையக மண்டல தலைவராக ஜோஷி நிர்மல், சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவு துணைத் தலைவராக அமரேஷ் புஜாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஊனமாஞ்சேரி காவல் அகாடமி துணைத் தலைவர் மற்றும் இயக்குநராக டேவிட்சன், காவல்துறை செயலாக்கப் பிரிவின் கூடுதல் தலைவராக சந்தீப் மிட்டல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.