சென்னை
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்தர். அந்த புகாரை 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்டார்
சீமான் பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்கு வளசரவாக்கம் போலீசார் மீண்டும் நேரில் சென்று அவரிடம் விசாரணை நடத்தினனர். இந்த விசாரணை சுமார் 7 மணி நேரம் நடந்துள்ளது வழக்கில் உள்ள முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருப்பதால் சீமான், போலீஸ் அனுப்பிய சம்மனை ஏற்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.