சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

அதுபோல இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது பெண் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், 19 பேர் இதுவரை கொரோனா தொற்றில்இருந்து விடுபட்டிருப்பதாகவும் கூறினார்.

இன்று 69 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 63 பேர் டில்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் (ஒரே இடத்தில்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்டம் வாரியாக விரவம்:

இதுவரை கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டவர்களின் விவரம்…..