இதில், நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் 69.4% பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக, அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. கிராமப்பகுதிகளில் கடந்த மே மாதத் தொடக்கத்திலேயே பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 28 ஆயிரம் பேரில் 48.5% பேர் 18 வயது முதல் 45 வயதுள்ளவர்கள், 51.5% பேர் பெண்கள். 18.7%பேர் நோய் தொற்றுக்கு அதிகமான வாய்ப்புள்ள பகுதிகளில் பணியாற்றி வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
18 வயது முதல் 45 வயதுள்ளோரில் அதிகபட்சமாக 43.3 சதவீதம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
46 வயது முதல் 60 வயதுள்ளவர்கள் 39.5 சதவீதம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக 60வயதுக்கு மேற்பட்டோர் 17.2 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த ஆய்வு நடத்தப்பட்ட மாவட்டங்களை வகைப்படுத்தும்போது, 0.62 சதவீதம் முதல் 1.03 சதவீதம் வரை நோய் தொற்றின் தாக்கம் இருந்தது. அதாவது 15 மாவட்டங்களில் நோய்தொற்று இல்லை, 22 மாவட்டங்களில் குறைந்த அளவு தொற்று, 16 மாவட்டங்களில் நடுத்தரமாக நோய் தொற்று, 17 மாவட்டங்களில் அதிமாகன அளவில் பாதிக்கப்பட்டோர் இருந்தனர்.