ந்தூர்

ந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 6 மாநில டிஜிபிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.

இந்த ஆண்டு மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று  இதனை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தில்  உள்ள இந்தூரில் 6 மாநில டி.ஜி.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் மத்தியப் பிரதேச டி.ஜி.பி. சுதீர் சக்சேனா,

“தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, மத்தியப் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள  மாநிலங்களைச் சேர்ந்த டி.ஜி.பி.க்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலை முறையாக நடத்துவதற்காக சத்தீஷ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநில டி.ஜி.பி.க்கள் மற்றும் மாநிலத்தின் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குத் தேர்தலின் போது குற்றவாளிகள் இடம் பெயர்கின்றனர். எனவே அவர்களின் பட்டியல் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்தப் பட்டியலில் தேடப்பட்டு வரும் மற்றும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளும் அடக்கம். சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வினியோகம் தடுப்புக்கான ஆலோசனையும் நடந்தது”

என்று கூறியுள்ளார்.