தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 30, செங்கல்பட்டில் 10, காஞ்சிபுரம் 1 மற்றும் திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 5 பேருக்கும் சேலத்தில் 4 பேருக்கும் மதுரை-யில் இருவருக்கும் மற்றும் நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மொத்தம் 15,151 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 31 ஆண்கள் 25 பெண்கள் என மொத்தம் 56 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

39 பேர் இன்று குணமடைந்த நிலையில் 371 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.