டெல்லி:  இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.  1,977 பேர் குணமடைந்தனர். நேற்று பாதிப்பு நேற்று முன்தினம் 1,675 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.46% ஆக உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள் குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, புதிதாக  மேலும், 2,124 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,42,192 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும்  17 பேர் சிகிச்சை பலனின்றி  இறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,507 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் ,977 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,02,714 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 14,971 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,27,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,92,67,44,769 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.