தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 26, செங்கல்பட்டில் 19, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 3 பேருக்கும் கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர, ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த ஒரு பயணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 12,600 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 30 ஆண்கள் 29 பெண்கள் என மொத்தம் 59 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

36 பேர் இன்று குணமடைந்த நிலையில் 354 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.