தமிழ்நாட்டில் இன்று புதிதாக 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 82, செங்கல்பட்டில் 42, திருவள்ளூரில் 18 மற்றும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 70, திருநெல்வேலி 11, தூத்துக்குடி 3, சேலம் 38, கன்னியாகுமரி 13, திருச்சி 15, விழுப்புரம் 9, ஈரோடு 42, ராணிப்பேட்டை 14, தென்காசி 1, மதுரை 12, திருவண்ணாமலை 13, விருதுநகர் 6, கடலூர் 13,

தஞ்சாவூர் 5, திருப்பூர் 21, திண்டுக்கல் 6, தேனி 4, சிவகங்கை 7, புதுக்கோட்டை 3, கிருஷ்ணகிரி 26,

திருவாரூர் 1, பெரம்பலூர் 1, நாமக்கல் 13, கள்ளக்குறிச்சி 1, வேலூர் 10,

தருமபுரி 6, ராமநாதபுரம் 0, மயிலாடுதுறை 7, நீலகிரி 4, நாகப்பட்டினம் 2,

கரூர் 2, அரியலூர் 0, திருப்பத்தூர் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.

இன்று மொத்தம் 23,212 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 326 ஆண்கள் 221 பெண்கள் என மொத்தம் 547 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

649 பேர் இன்று குணமடைந்த நிலையில் 5,630 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.