சென்னை: தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 51 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை  உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

தமிழகம்  முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 51 நீபதிகள்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி எஸ்.ஜவஹர், கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதி ஜவஹருக்கு பதிலாக ஜி.விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தின் இரண்டாவது நீதிபதி கே.ரவி முதலாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது நீதிபதியாக டி.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.,