‘பாகுபலி-2’ படத்தை அடுத்து .பிரமாண்ட டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதிய தெலுங்கு படம்- ‘RRR’.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட இரு பழங்குடியின போராளிகளை பற்றிய இந்த நிஜக்கதையில் ராம்சரண், ஜுனியர் என்.டிஆர் ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள்.

ஹாலிவுட் நட்சத்திரங்கள் ரே ஸ்டீவன்சன், அலிசன் டோடி, இந்தி நடிகர்கள் அஜய்தேவ்கான், அலியா பட், தமிழில் இருந்து சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் ‘பான் இந்தியா’ படமாக ‘ஆர். ஆர்.ஆர்’ உருவாகிறது.

ஐதராபாத்தில் பிரமாண்ட அரங்கம் அமைத்து தொடர்ச்சியாக 50 நாட்கள் இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளன.

இரு ஹீரோக்களுடன் ஹாலிவுட் நடிகர்களும் இதில் கலந்து கொண்டு நடித்துள்ளனர்.

இந்த ‘ஷெட்யூலுடன்’ ஆக்‌ஷன் காட்சிகள் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ள படக்குழு, இதனை தொடர்ந்து புனே நகருக்கு அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்ல உள்ளது. புனேயில் ஒரு வாரம் ஷுட்டிங் நடக்கிறது.

– பா. பாரதி