ராமேஸ்வரம்:
லங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக சேராங்கோட்டை பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக சேராங்கோட்டை பகுதிக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இன்று நள்ளிரவு 13 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து இதுவரை 47 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.