சென்னை: தமிழ்நாடு முழுவதும் 38ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில்  5 விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்க சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.  ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு, ரூ.73.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் பயனாளி ஒருவருக்கு தலா 5 செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என  அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,  தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க நிதியை ஒதுக்கி இருப்பதாகதெரிவித்து உள்ளது.

இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்கப்படும்.   பயனாளிகளில் குறைந்தது 30 % எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது  எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.