சென்னை:  தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைந்துள்ள அவரு சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 49வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் திராவிட கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது.  இதை யொட்டி,  முன்னிட்டு சென்னை அண்ணா சிலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் கீலோ பெரியாரின் உருவப்படம் வக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலை  கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் எ.வ.வேலு, பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று இருந்தார்கள். மேலும், அரசுத் துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பெரியார் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில், தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்! வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்!  என குறிப்பிட்டுள்ளார்.