சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 434 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் சில பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது. இது பாதிக்கப்பட்டுள்ள 434 பேரில் 309 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால்  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5946 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2599 ஆக  உயர்ந்துள்ளது.
இன்று மேலும்  5 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த  உயிரிழப்பு 71 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 6 பேர் மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்தவர்கள். மேலும்  40 பேர் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பயிவர்கள்,  2 பேர் குஜராத்திலிருந்தும், 1 பேர் கர்நாடகாவிலிருந்தும் தமிழகத்திற்கு திரும்பியவர்கள்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் பட்டியல்..