மதுரை: இங்கிலாந்தில் இருந்து மதுரை வந்த  4 பேர் தலைமறைவாகி விட்டனர்.

ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்தில் இருந்து மதுரைக்கு 80 பேர் திரும்பி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் 76 பேரை சுகாதார துறையினர் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

ஆனால் எஞ்சிய 4 பேரை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை காவல் துறையினரின் உதவியுடன் சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர். 4 பேருடைய முகவரியில் சென்று விசாரித்தபோது அவர்கள் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது.

தேவையற்ற அச்சம் காரணமாக வேறு எங்காவது சென்றிருக்கலாம் என்று  சுகாதார துறை அதிகாரிகள் கருதுகின்றனர். அடையாளம் காணப்பட்ட 76 பேரில் கொரோனோ அறிகுறியுடன் இருந்த 26 பேரை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டும் கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு உருமாறிய கொரோனோ வைரஸ் பாதிப்பா உள்ளதா என்பதை அறிய சளி மாதிரி புனேவிற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.