சென்னை
தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர்களாக 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் அரசுப்பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது ஆங்கிலத்தில் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என அழைக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில்
“தமிழக ஆளுநர் கீழ்க்கண்டோரைத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர்களாக நியமித்துள்ளார். இவர்கள் இன்னும் 6 வருடங்களுக்கு அல்லது அவர்கள் 62 வயது ஆகும் வரை பணியில் இருப்பார்கள்
- திரு எஸ் முனியநாதன் ஐ ஏ எஸ்
- பேராசிரியர் கே ஜோதி சிவஞானம்
- டாக்டர் கே அருள்மதி
- ஏ ராஜ் மரியசூசை
ஆகியோர் ஆவார்கள்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.