சென்னை: 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் கூடுதல் டிஜிபிக்களாக இருந்து வந்த நிலையில், அவர்களை டிஜிபியாயாக உதவி உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசின் உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு  வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி,

அமரேஷ் பூரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் குற்றப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.ரவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெயந்த் முரளி ஐபிஎஸ், கருணா சாகர் ஐபிய ஆகிய  2 ஏடிஜிபிக்களும் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.