துரகிரி

க்தர்களுக்கு சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில்  தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

அதாவது  பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் எனவும் இரவில் பக்தர்கள் தங்குவதற்கும், ஆற்று பகுதிகளில் இறங்கிக் குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

மேலும் மலை ஏற அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து வருகின்றனர்.