சென்னை: ஆவடி உள்பட 4 மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  தஞ்சை, திருச்சி, ஆவடி, திண்டுக்கல் மாநகராட்சிகளின் ஆணையர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு மாநிலம் முழுவதும் ஐஏஎஸ்  ஐபிஎஸ் ,காவல் ஆய்வாளர் என கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை ஆயிரக்கணக்கான அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக  4 மாநகராட்சி  ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருச்சி ,திண்டுக்கல், ஆவடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாநகராட்சி ஆணையர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக முஜிபூர் ரஹ்மானை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆவடி மாநகராட்சி ஆணையராக கே சிவகுமார் , தஞ்சை மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.