சென்னை:  தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 16ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருந்த நிலையில், அன்றைய தினமும்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15 ஆம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால், 16 ஆம் தேதியும்(சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்து உள்ளார். வரும்  18 ஆம் தேதி அன்று பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்  என்றும்  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

அதுபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.