சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கட்சி ரீதியில் செயல்பட்டு வரும் 38 மாவட்டங்களுக்கான தேர்தல் பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் நடைபெறாத அண்டை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.