சென்னை: அடுத்தடுத்த மாதங்களில் வரும் பண்டிகைகளையொட்டி, மக்கள் கூட்டத்தை சமாளிக்க தென்மாவட்ட ரயில்கள் உள்பட 36  ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

ஆவணி, புரட்டாசி மாதங்களில் ஏராளமான இந்து பண்டிகைகள், மாதா திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வகையில், ரயில்களில் ஏற்படும்   நெரிசலை சமாளிக்க பல்வேறு ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி,  தென்மாவட்ட ரயில்கள் உள்பட மொத்தம் 36 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. சென்னை எழும்பூர் – குருவாயூர் ரயிலில் 2 ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு 2ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.