ட்டி

ரே மாதத்தில் நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து 33 டன் காலி மஹ்டு பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 76 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.  இவற்றில் பல கிராமப்புறங்கள், நீர் நிலைகள், வனப்பகுதிகள் அருகில் உள்ளன.   குடிமகன்கள் மது அருந்திய பிறகு காலி பாட்டில்களை வனப்பகுதி மற்றும் நீர் நிலைகளில் வீசுகின்றனர்.  சுற்றுச்சூழல் இதனால் பாதிப்பு ஏற்படுவதுடன் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் அபாயம் உண்டாகிறது.

எனவே வனப்பகுதியில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதைத் தடுக்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கடந்த 15-ம் தேதி முதல்மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 நிர்ணயித்து, காலி மதுபாட்டில்கள் மீண்டும் டாஸ்மாக்கடைகளால் பெறப்படுகின்றன.  இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வனப்பகுதியில் வீசப்பட்ட மதுபாட்டில்களை சேகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, கடந்த மாதம் வனப்பகுதி, நீர்நிலையோடும், சுற்றுலா பிரதேசங்கள் மற்றும் சாலையோரம் கிடந்த 33 டன் காலி மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளாக வனப்பகுதிகளில் வீசப்பட்ட மதுபாட்டில்களை சேகரிக்க தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் உதவியுடன், 11 குழுக்கள் அமைக்கப்பட்டன.  மேலும், ஆங்காங்கே வீசப்படும் மது பாட்டில்களைச் சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.