சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப தென்மாவட்டங்களில் மட்டும்   1187 சிறப்பு பேருந்துகள் ‘ரெடி’யாக இருப்பதாகவும், மொத்தம் 3287  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து  துறை தெரிவித்து உள்ளது.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக தமிழ்நாடு  அரசு சார்பில் கடந்த 3 நாட்களாக  சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதுபோல சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பவும்இன்றுமுதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  18-ந்தேதி வரை இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து கூடுதலாக பஸ்கள் இன்று இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார்  5 லட்சம் பேர் நகரங்களில் இருந்து  வெளியூர் சென்றுள்ளனர்.  அவர்களில் பெரும்பாலோர் இன்றுமுதல் சென்னை உள்பட நகர்ப்புறங்களுக்கு திரும்புவார்கள். இதையொட்டி, போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை இயக்குகிகறதது. அதன்படி இன்றுமுதல் 18ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பயணிகள் கூட்டத்தை தொடர்ந்து மேலும் சில பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து கூடுதலாக பஸ்கள் இன்று முதல்  இயக்கப்படுகின்றன. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், ஓசூர், தர்மபுரி, பெங்களூர் உள்பட பல நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 1187 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3287 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இதேபோல சென்னையை தவிர்த்து பிற நகரங்களுக்கு 1525 சிறப்பு பஸ்கள் இன்று விடப்பட்டு உள்ளது.

வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும், பிற நகரங்களுக்கும் இதுவரையில் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பஸ்கள் சென்னை திரும்புவதற்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நாளை அதிகாலையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம், பெருங்களத்தூர், தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலைய பகுதிகளில் நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்படுகிறார்கள்.  நாளை 17-ந்தேதி வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 1941 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளன.