தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 16, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 3 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கிருஷ்ணகிரியில் 2 பேருக்கும் கோவை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர, கனடா-வில் இருந்து வந்த ஒரு பயணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 13,130 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 20 ஆண்கள் 11 பெண்கள் என மொத்தம் 31 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

58 பேர் இன்று குணமடைந்த நிலையில் 332 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.