கோவை:

30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள,  பாரதியார் பல்கலை. துணைவேந்தராக இருந்த கணபதி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட கணபதி,  கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான நேற்றைய விசாரணையின்போது,  வழக்கை 8ந்தேதி (இன்று)க்கு தள்ளி வைத்து நிதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கணபதியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்க அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனத்துக்காக ரூ.30  லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். அவருக்கு  உதவியாக இருந்த் பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.

மேலும் கணபதியின் வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்ட ஏராளமான பணம் மற்றும் ஆவ னங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், லஞ்சப் புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி சார்பாக கோவை நீதி மன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கணபதிக்கு ஜாமின் கொடுப்பது குறித்து, அரசு பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி மீது மேலும் ஊழல் புகார் கூறியுள்ளனர்.  கணபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் 20-பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.