சென்னை,

ல்லாவரம் அருகே உள்ள சுமார் 30 கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்தை, நித்யானந்தாவிற்கு சொந்தமான இடம் என்ற கூறி, நித்தியானந்தா சீடர் நடிகை ரஞ்சிதா தனது அடியாட்களுடன் வந்து கலாட்டா செய்தார்.

இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை  பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பச்சையம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்  கிருஷ்ணன் மற்றம் அவரது  உறவினர்கள்  அனைவரும் ஒரே குடியிருப்பு வளாகத்தில் தனித்தனி வீடுகளில் 40 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

இந்த இடம் அரசு புறம்போக்கு நத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இடத்தில் அளவு 2 ஏக்கர் 19 சென்ட். இதன் தற்போதைய மதிப்பு ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த இடம் தனக்கு சொந்தமானது என கூறி ராமநாதன் என்பவர் சென்னை  உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், ராமநாதன் ஆவனங்களை தாக்கல் செய்யாததால் வழக்கு தள்ளுபடியானது.

இதையடுத்து கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் இக்குடியிருப்பு வளாகத்தில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பம்மலுக்கு தனது சீடர்களுடன் வந்த நடிகை ரஞ்சிதா, வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணனிடம்  ‘‘இந்த இடம் ராமநாதனின் மகளுக்கு சொந்தமானது. அவர் எங்கள் மடத்தில் நித்யானந்தாவின் சீடராக சேர்ந்துள்ளார்.  இந்த இடத்தை நித்யானந்தாவின் மடத்திற்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

எனவே நீ உடனே இந்த இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு’’ என்று மிரட்டியுள்ளார்.

மேலும் அவருடன் வந்த சீடர்கள் அந்த குடியிருப்பு வளாகத்திலேயே தாங்கள் கொண்டு வந்திருந்த ரெடிமேடு தார்ப்பாய்களை கொண்டு குடில் அமைத்துள்ளனர். அத்தோடு, அங்கு  நித்யானந்தாவின் படத்தை வைத்து பூஜை புனஸ்காரத்திலும் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் கொடுத்துள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.