ஜாம்ஷெட்பூர்

ஜாம்ஷெட்பூர் ரெயில் நிலையத்தில் 3 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டுள்ளார்.

ஜாம்ஷெட்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு பெண் பயணி தனது மூன்று வயது மகளுடன் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.    அவர் கண் விழித்த போது அந்தக் குழந்தை காணவில்லை.  அதையொட்டி அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.  சிறுமியை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.

அந்த ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவின் மூலம் குழந்தையைக் கடத்திச் சென்றவரை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.   அவர் பல குற்றங்களை தொடர்ந்து செய்தவர் என்பது அவர் முக அடையாளத்தில் தெரிய வந்துள்ளது.  அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை விசாரணையில் அந்த நபர் தாம் சிறுமியை கடத்தி  பலாத்காரம்  செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.   அத்துடன் அந்த சிறுமியின் தலையைத் துண்டித்து அருகில் உள்ள புதரில் வீசியதையும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் அந்த சிறுமியின் தலையற்ற உடலை கண்டுபிடித்துள்ளனர்.  இது குறித்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்  காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.,