சென்னை: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யானை கவுனியில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தந்தை தலில் சந்த், தாய் புஷ்பாபாய், மகன் ஷீத்தல் ஆகியோர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  குடும்ப பிரச்சினை காரணமாக துப்பாக்கியால் சுட்டு 3 பேரும் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சவுக்கார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் தலில்சந்த் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.