சென்னை

சிறுமியைக் கூட்டு பலாத்காரம் செய்ததற்காக 3 இளைஞரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வீட்டைவிட்டு ஓடி வந்த பதினான்கு வயது சிறுமி சென்னை அடையாறு பகுதியில் ஒரு இடத்தில் வேலை செய்கிறார்..கொஞ்ச நாளில் காணாமல் போய்விடுகிறார்.. உடனே அவரது முதலாளி காவல் நிலையத்தில் புகார் செய்கிறார் போலீசாரும் புகாரை ஏற்றுப் பெண்ணை காணவில்லை என்று பல இடங்களில் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்கிறார்கள்..

இதனைப் பார்த்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சிறுமி பற்றித் துப்புக் கொடுக்கிறார். பாலவாக்கம் பக்கம் ஒரு உணவகத்தில் சிறுமி வேலை பார்த்து வருகிறார் என்பது அவர் சொன்ன தகவல். இதை வைத்துப் போலீசாரும் சிறுமியைக் கண்டுபிடித்து விடுகிறார்கள்.பின்னர் அவரிடம் விசாரித்தபோதுதான் அதிர்ச்சியான தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவருகின்றன.

முதலில் வேலை பார்த்த இடத்தில், வாட்டர் கேன் விநியோகம் செய்யும் குமார் என்பவர் இந்த சதீஷ் சிறுமியை அணுகி ஏராளமான ஆடைகளை வாங்கி தருவதாகச் சொல்லி ஆசை வார்த்தை காட்டி இருக்கிறார்..

இதனை நம்பி சதீஷ் குமாருடன் சிறுமியின் ஒரு ஆட்டோவில் சென்றிருக்கிறார். கடற்கரைப் பக்கம் சென்ற சதீஷ் குமார் அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்குள் சிறுமியை ஏற்றி அங்கு வைத்தே  பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் இதற்கு அவரது 2 நண்பர்களும் உடந்தையாக இருந்து இருக்கிறார்கள். அவர்களும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தைக் கண்டு பதறிப்போன அங்கிருந்த பொதுமக்கள் மூவரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் மூவருமே சிறுமியை விட்டுவிட்டுத்  தப்பி ஓடிவிட்டனர்.  இந்த சம்பவத்திற்குப் பின் பயந்து போன சிறுமி, முதலாளியிடம் போய் சொன்னால் பிரச்சனை வரும் என்று அடையாறு போகாமல் பாலவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்..

இப்போது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் சதீஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் வினோத், மகாராஜா ஆகிய  மூன்று பேரையும் போஸ்கோ சட்டத்தில் கைது செய்திருக்கின்றனர்