ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, விண்டீஸ் அணியைவிட இன்னும் 104 ரன்கள் பின்தங்கியுள்ளது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து, 250 ரன்களை சேர்த்துள்ளது.

அந்த அணியின் திரிமன்னே மட்டுமே அரைசதம்(55) அடித்தார். நிஸான்கா 49 ரன்களில் அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார். சந்திமால் 44 ரன்களும், டி சில்வா 39 ரன்களும், டிக்வெல்லா 20 ரன்களும் அடித்தனர்.

மொத்தம் 103 ஓவர்கள் ஆடியுள்ள இலங்கை அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் இன்னும் 104 ரன்கள் பின்தங்கியுள்ளது.