சென்னை: 2ம் நிலை காவலர் தேர்வு ஏப்ரல் 12ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

2020ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள், 2ம் நிலை சிறை கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்ப  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தேர்வை நடத்தியது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உடல்கூறு அளத்தல், உடல் திறன் போட்டி ஆகியவை கடந்த 8ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால்,  சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் மார்ச் 8ம் தேதி முதல் நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 12ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்த உடல்தகுதி தேர்வு நடைபெறும் இடங்களை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது