சென்னை:

சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்கும் வகையில்  இன்று மதியம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

(பைல் படம்)

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று  தொடங்கிய நிலையில், இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து சபை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில்  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்  நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இம்மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், மேகதாது, ஸ்டெர்லைட், கஜா நிவாரணம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.