சென்னை

மிழகத்தில் இன்று 1548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,42,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 31,457 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,81,14,093 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளார். இதுவரை 35,42,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,032 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,964 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,91,653 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 13,094 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.

இன்று 431 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 4280 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 158 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 155 பேர் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.