சென்னை: தமிழ்நாடு  மாநிலம் முழுவதும் இன்று மேலும் 1,859 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில், 181பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழ்கத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. தொற்றின் தாக்கம் காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கையும்  34,023ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியோர் மொத்த  எண்ணிக்கை 25,00,434 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 21,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில், இன்று 181 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை  5,37,732 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 151 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,79,08 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே ஒருவர் மட்டும் தொற்று பாதிப்பு காரணமாக பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8316 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 1508 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அங்கு 188 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 2வது இடத்தை தலைநகர் சென்னை பிடித்துள்ளது. அங்கு 181 பேரும், ஈரோட்டில் 166 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 23
செங்கல்பட்டு 113
சென்னை 181
கோயம்புத்தூர் 188
கடலூர் 68
தர்மபுரி 30
திண்டுக்கல் 12
ஈரோடு 166
கள்ளக்குறிச்சி 49
காஞ்சிபுரம் 45
கன்னியாகுமரி 22
கருர் 18
கிருஷ்ணகிரி 38
மதுரை 19
மயிலாடுதுரை 20
நாகப்பட்டினம் 34
நாமக்கல் 60
நீலகிரி 40
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 26
ராமநாதபுரம் 8
ராணிப்பேட்டை 20
சேலம் 95
சிவகங்கை 27
தென்காசி 15
தஞ்சாவூர் 102
தேனி 12
திருப்பதூர் 18
திருவள்ளூர் 69
திருவண்ணாமலை 54
திருவாரூர் 22
தூத்துக்குடி 17
திருநெல்வேலி 21
திருப்பூர் 78
திருச்சி 70
வேலூர் 30
விழுப்புரம் 30
விருதுநகர் 13