டெல்லி; இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பும்,  60 பேர் பலியாகி உள்ளதுடன் 2,496 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3377 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,68,799 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 17,801 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக உள்ளது.

நேற்று ஒரேநாளில் தொற்றில் இருந்து  2,496 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,30,622 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 60 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் 22,80,743 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,88,65,46,894 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.