சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கு தொற்று உறுதி யாகி உள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் இன்று 20,014 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.  அதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் 7 பேருக்கும்,  காஞ்சிபுரத்தில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால்  கடந்த 24 மணி நேரத்தில்  யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில்  இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உள்ளது.

இன்று ஒரே நாளில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 316 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தமிழகம்  முழுவதும் 488 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 0
செங்கல்பட்டு 7
சென்னை 44
கோவை 2
கடலூர் 0
தர்மபுரி 0
திண்டுக்கல் 0
ஈரோடு 0
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 0
கன்னியாகுமரி 1
கரூர் 1
கிருஷ்ணகிரி 1
மதுரை 2
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 0
நாமக்கல் 1
நீலகிரி 1
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 1
சேலம் 1
சிவகங்கை 0
தென்காசி 0
தஞ்சாவூர் 1
தேனி 1
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 3
திருவண்ணாமலை 1
திருவாரூர் 0
தூத்துக்குடி 0
திருநெல்வேலி 2
திருப்பூர் 0
திருச்சி 2
வேலூர் 0
விழுப்புரம் 0
விருதுநகர் 0