டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 44 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு தகவல்களை வெளியிட்ட உள்ளது. அதன்படி, நேற்று ஒரேநாளில் புதிதாக மேலும்,  20,557 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,39,59,321 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும், 44 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,211 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக  உள்ளது.

நேற்று ஒரே நாளில் 19,216 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,32,86,787ஆக உயர்ந்துள்ளது. ணமடைந்தோர் விகிதம் 98.47% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,46,323 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சி கிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2,03,21,82,347 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 40,69,241 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.