டில்லி

டைநீக்கம் செய்யப்பட்ட எம் பிக்கள் அதை எதிர்த்து தொடர்ந்து  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று, மாநிலங்களவையில் நேற்று பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 19 பேர் இந்த வாரம் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர், தி.மு.க.வை சேர்ந்த 6 பேர், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த 3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் என ௧௯ எம்.பி.க்கள் இந்த வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், இந்த வாரத்தின் மீதமுள்ள நாட்களில் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி இந்த வாரத்திற்கு அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

எம்பிக்கள் தங்களது கைகளில், 23 எம்.பி.க்களை மோடி மற்றும் அமித்ஷா சஸ்பெண்டு செய்து விட்டனர் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி உள்ளனர். இரவு பகல் பாராமல் அவர்கள் அந்த இடத்தில் இருந்து அகலாமல் அமர்ந்தபடி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடருகிறது.இந்த போராட்டம் நாளை மதியம் 1 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.