தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 939, செங்கல்பட்டில் 474, திருவள்ளூரில் 191 மற்றும் காஞ்சிபுரத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 131, திருநெல்வேலி 87, திருச்சி 73, தூத்துக்குடி 57, விருதுநகர் 54, கன்னியாகுமரி 52, தேனி 47, மதுரை, ராணிப்பேட்டை மற்றும் தென்காசியில் தலா 43 பேருக்கும், ஈரோடு மற்றும் சேலத்தில் தலா 36 பேருக்கும், சிவகங்கை 31, விழுப்புரம் 30,

திருவண்ணாமலை 26, கிருஷ்ணகிரி 24, திண்டுக்கல் 23, நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் தலா 30 பேருக்கும்,

கடலூர் 17, மயிலாடுதுறை மற்றும் திருப்பூரில் தலா 15 பேருக்கும், வேலூர் 14, பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 13 பேருக்கும், தருமபுரி 11,

நீலகிரி, கரூர் மற்றும் திருவாரூரில் தலா 9 பேருக்கும்,

நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டையில் தலா 7 பேருக்கும், ராமநாதபுரம் மற்றும் திருப்பத்தூரில் தலா 5 பேருக்கும், அரியலூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர, ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கும், பங்களாதேஷில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இன்று மொத்தம் 31,810 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,495 ஆண்கள் 1,227 பெண்கள் என மொத்தம் 2,722 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2,413 பேர் இன்று குணமடைந்த நிலையில் 18,687 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.